
திசையன்விளை: பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்க முயற்சி
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள முகைதீன் காதர் சாகிப் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான 1. 25 ஏக்கர் அளவுள்ள நிலத்தை போக்குவரத்து துறை அபகரிக்க முயற்சி செய்துள்ளது. இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி இன்று (அக்.,9) வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்து எஸ்டிபிஐ போராட்டத்தை முன்னெடுக்கும் என கூறியுள்ளார்.