நெல்லையில் விதைகளுடன் உருவாகும் விநாயகர் சிலை

81பார்த்தது
விநாயகர் சதுர்த்தி விழா வருவதை முன்னிட்டு நெல்லையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் வண்ணார்பேட்டையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் 43வது வருடமாக களிமண் விநாயகர் சிலைகளை சதுர்த்திக்கு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு நாவல் மற்றும் நெல்லி விதைகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை தயாரிப்பதாகவும், இதை வீட்டு தோட்டத்தில் கரைத்து மரமாக வளர்க்கலாம் என்றும் தெரிவித்தார். அதிகபட்சம் 2 அடி வரை உயரத்தில் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி