நெல்லையில் கடலுக்கு செல்லாத மீனவர்கள்

60பார்த்தது
வங்க கடலில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உவரி, இடிந்தகரை கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், பஞ்சல், தோமையார்புரம் உட்பட 10 கிராமத்தைச் சேர்ந்த 8, 000 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டு படகுகள் அனைத்தும் கடற்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி