" 'NO PARKING' பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது"

85பார்த்தது
" 'NO PARKING' பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது"
'NO PARKING' பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு தனிநபரோ, குடியிருப்பு சங்கமோ அல்லது வணிக நிறுவனமோ, 'NO PARKNG என்ற பலகைகள் அல்லது தடுப்புகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி