பிரதமர் மோடிக்கு நான்கு வயது சிறுமி வேண்டுகோள்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே அகத்தியர் பட்டிக்கு நாளை பாரத பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையாற்ற வருகை தர உள்ளார். பாரதப் பிரதமரை வரவேற்கும் விதமாக அகத்தியர் பட்டியைச் சேர்ந்த அபிஷானா என்ற சிறுமி பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரதமருக்கு சிறுமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அகத்தியர் அருவியில் பொது மக்கள் கட்டணமில்லாமல் குளிக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்