சேரை அருகே மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்
திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கூனியூரை சேர்ந்த மாற்று திறனாளி பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து அறிந்த மாற்றுத்திறனாளியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகேஷை சேரன் மகாதேவி போலீசார் கைது செய்தனர்.