திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள ராமையம்பட்டியில் ஜெயசீலன் என்பவருக்கு சொந்தமான தனியார் இரும்பு குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்தில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறை தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் காற்று அதிகம் வீசியதால் தீ மளமளவென பரவியது. இதில் இரும்பு பொருட்கள் பல தீயில் கருகி நாசமாகின.