நெல்லை சிறையில் காவலரை தாக்கிய கைதி

83பார்த்தது
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று (செப்.13) மதுரையைச் சேர்ந்த தண்டனை கைதி மீனாட்சி சுந்தரம் சக கைதி ராஜேஷ் என்பவரை தாக்க முயன்றுள்ளார். அதனை தடுக்கச் சென்ற சிறை காவலர் மகேந்திரனையும் தாக்கியதில் காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறைக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி