புதுசும் பழைசும்; ஒரே நேரத்தில் கடந்த ரயில்கள் வீடியோ வைரல்

82பார்த்தது
சென்னையில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு அண்மையில் புதிதாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலானது ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தை கடந்தது. அதே நேரம் திருவனந்தபுரம் திருச்சி இன்டர்சிட்டி ரயிலும் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தை ஒரே சமயத்தில் கடந்த வீடியோ தற்போது நெல்லையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பழைய தோற்றத்தில் உள்ள ரயிலும் புதிய ரயிலும் ஒரே நேரத்தில் கடந்தது கவனத்தை ஈர்த்தது.

தொடர்புடைய செய்தி