ஏற்காடு - Yercaud

கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38), கார் டிரைவர். இவருக்கும், மூணாங்கரட்டை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததது. கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம்(செப்.17) சீனிவாசன் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நின்றபோது கோவிந்தராஜ் தரப்பினர் சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், வாசுதேவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా