மொட்டை அடித்து அனுப்பப்பட்ட தமிழக மீனவர்கள்

64பார்த்தது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலையான தமிழக மீனவர்கள் மொட்டை அடித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலா ரூ.50,000 அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 5 மீனவர்களை மொட்டை அடித்து இலங்கை அரசு அனுப்பியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி