சிங்காநல்லூர் - Singanallur

புகையிலை பொருட்கள் விற்ற கர்ப்பிணி பெண் கைது!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல்துறையினர் ஜெய் சாந்தி தியேட்டர் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நீலிக்கோனம் பாளையத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு 54 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் மகாலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். பின்னர் நேற்று (செப்.,11) மாலை பிணையில் விடுவிக்கப்பட்டார். மகாலட்சுமி ஏழு மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా