பூம்புகார் - Poombhukar

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கோனையாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த நந்தகோபால் (65) வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் நடைபெற்ற திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றாா். அவரது மருமகள் வைதேகி வீட்டில் இருந்த நிலையில், நள்ளிரவில் பக்கத்து அறை உடைக்கப்படும் சத்தம் கேட்டு மாமனாருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். பின்னா், அவா் வந்து பாா்த்தபோது தனது அறையின் கதவு உடைக்கப்பட்டதும், பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ. 31,000 திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்