பூம்புகார் - Poombhukar

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கோனையாம்பட்டினம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த நந்தகோபால் (65) வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் நடைபெற்ற திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றாா். அவரது மருமகள் வைதேகி வீட்டில் இருந்த நிலையில், நள்ளிரவில் பக்கத்து அறை உடைக்கப்படும் சத்தம் கேட்டு மாமனாருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்துள்ளாா். பின்னா், அவா் வந்து பாா்த்தபோது தனது அறையின் கதவு உடைக்கப்பட்டதும், பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ. 31,000 திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Sep 15, 2024, 15:09 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

கும்பாபிஷேகத்திற்காக சீர்வரிசை எடுத்து வந்த மீனவர்கள்

Sep 15, 2024, 15:09 IST
நாகை மாவட்டம் அக்கரைபேட்டையில் உள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் இருந்து அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் கோவிலுக்கு இன்று சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மேளதாளம் முழங்க காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் மஞ்சள் குங்குமம் மலர் தேங்காய் பழம் பட்டாடைகள் மற்றும் தங்க நகை அடங்கிய தாம்பூலங்களை மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் சீர்வரிசையாக முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். சீர்வரிசை எடுத்து வந்த மீனவர்களுக்கு, அக்கரைப்பேட்டை கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் கொண்டு வந்த சீர்வரிசை பெற்றுக் கொண்ட ஆலய நிர்வாகிகள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைத்தனர். பின்னர் பாரம்பரிய வழக்கப்படி தலைமை கிராம அக்கரைப்பேட்டைக்கு சீர்வரிசையை கொண்டு வந்த கீச்சாங்குப்பம் கிராம மீனவர்கள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்பாளை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.