
மேலூர்: ஜம் ஜம் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
மதுரை மாவட்டம் மேலூர் ஜம் ஜம் பள்ளிவாசலில் நேற்று (மார்ச் 27) மாலை ராமசுந்தரம், மற்றும் லிபாஸ் ஷேக், வாசுதேவன், ஆசிரியர் சுப்பிரமணி, யுவராஜ், பெரோஸ் கான், சலீம் வழக்கறிஞர்கள் கென்னடி, பாஸ்கர், டேனியல் மற்றும் வி. துரைபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு நோன்பின் மாண்பு குறித்து பேசினார்கள். இதில் வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியினரை பள்ளிவாசலின் தலைவர் ஜிப்ரில் அவர்கள் வரவேற்றார். நோன்பு திறக்கும் நிகழ்வில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.