மேலூர் - Melur

ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஆக.,30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உரிமையாக நிரப்ப வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக அதே பணியிடத்தில் நியமிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லம்மாள் தலைமையில் நூற்றுக்கு அதிகமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా