சோழவந்தான் - Cholavanthaan

ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

மதுரை: சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். மதுரை மாவட்டம் சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி தலைமையில் துணை தலைவர் சங்கரபாண்டியன், நிர்வாகிகள் தேனி ஈஸ்வரன், இனியவன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் நேற்று (செப்.,21) ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மீது அவதூறு பரப்பும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில நிர்வாகி ஜெய்சங்கர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறு பரப்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஆகியோரை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடந்தது. சோழவந்தான் போலீசார் மறியலை கை விடுமாறு கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా