ஓசூர் - Hosur

ஓசூர்: தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

ஓசூர்: தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சல்மான் (30), கூலித் தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் விவகாரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சல்மான் நேற்று முன்தினம் (செப்-14) அன்று வீட்டின் அருகே வக்கீல் லேஅவுட் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ஓசூர் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி