முன்னாள் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக் இட்டதால் விபத்து

69பார்த்தது
ஜெகதாபி அருகே முன்னாள் சென்ற சரக்கு வாகனம் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.

கரூர் மாவட்டம், மணவாடி, பெருமாள் பட்டி அருகே கல்லுமடை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 46 இவர் மார்ச் 17ஆம் தேதி காலை 8: 45 மணி அளவில், கரூர் - மணப்பாறை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.


இவரது வாகனம் ஜெகதாபி அருகே சென்றபோது, கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தெற்கு மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் வயது 26 என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், சுப்பிரமணி ஓட்டிச் சென்ற டூவீலருக்கு முன்பாக சென்று திடீரென பிரேக்கிட்டதால் சுப்பிரமணியன் டூ வீலர் நவீன் குமார் ஓட்டி சென்ற சரக்கு வாகனத்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுப்பிரமணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மகன் பெரியசாமி வயது 27 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை சாலை விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்காமல் விபத்து ஏற்படுத்திய நவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி