கிள்ளியூர் - Killiyur

நித்திரவிளை: நள்ளிரவில் மூதாட்டியை தூக்கி சென்று பலாத்காரம்

நித்திரவிளை: நள்ளிரவில் மூதாட்டியை தூக்கி சென்று பலாத்காரம்

குமரி மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில் உள்ள ஒரு கடை வராண்டாவில் நேற்று முன்தினம் (அக்.,16)  நள்ளிரவு இரண்டு மூதாட்டிகள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு குடிபோதையில் வந்த சுமார் 45 வயது நபர் ஒருவர் இரண்டு மூதாட்டிகளிடம் வம்பு இழுத்து இருக்கிறார். இதனால் ஒரு மூதாட்டி மட்டும் அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். மற்றொரு மூதாட்டியை  100 மீட்டர் அப்பால் உள்ள ஒரு பேக்கரி கடையின் பின்பகுதியில் கொண்டு சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்த்த செக்யூரிட்டி ஒருவர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் தனது நாயை தேடி சமூக ஆர்வலர் ஒருவர் அந்த பகுதியாக சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியை கண்டு உடனே அருகில் சென்ற சமூக ஆர்வலர், போதை ஆசாமிக்கு கன்னத்தில் பளார் என்று அறை கொடுத்து, நித்திரவிளை சந்திப்பு கொண்டு  வந்து உள்ளார். இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது, அந்த நபர் நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மனைவி பிள்ளைகள் பிரிந்து சென்று விட்டார்கள் என்பது தெரிய வந்தது. ஆனால் பலாத்கார சம்பந்தமாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால் நேற்று (அக்.,17) முழுவதும் காவல் நிலையத்தில் வைத்துவிட்டு போலீசார் அவரை மாலையில்  விடுவித்தனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా