கொல்லங்கோடு:   பத்ரகாளி அம்மன் கோவிலில் வித்யாரம்பம்

75பார்த்தது
இந்த ஆண்டுக்கான விஜயதசமி நாள் கேரள பஞ்சாங்கம் படி இன்று (13. ம் தேதி) கொண்டாடப்படுகிறது. அதன்படி குமரி கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பண்டிதர்கள் குழந்தைகளுக்கு தங்கத்தால் நாவில் ஓம் என எழுதி பாத்திரத்தில் நிரப்பப்பட்ட இருக்கும் அரிசியில் தமிழ் முதல் எழுத்தான அ எனும் எழுத்தை கைகளை பிடித்து எழுத வைத்து அவர்களது கல்வியை துவக்கி வைத்தனர்.
இதில் குமரி - கேரளாவை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் கலந்துகொண்ட குழந்தைகள் அடம்பிடித்து அழுத சம்பவங்களும் அரங்கேறின.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி