கிள்ளியூர்: அங்கன்வாடிக்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ

82பார்த்தது
கிள்ளியூர்: அங்கன்வாடிக்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி, வட்டக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள  அங்கன்வாடி  மையம் 113 -   வாடகை கட்டிடத்தில்   செயல்பட்டு வருகிறது. இதனால்  இந்த  அங்கன்வாடி  மையத்திற்கு  புதிய கட்டிடம்  கட்டிதர  வேண்டும்  என்று  இப்பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள்  மற்றும்  அங்கன்வாடி  பணியாளர்  ஆகியோர்  கிள்ளியூர்  சட்டமன்ற  உறுப்பினர்  ராஜேஷ் குமார் -டம்  கோரிக்கை  விடுத்தனர்.

இதையடுத்து அங்கன்வாடி கட்டிடம் அமைக்க சட்டமன்ற  உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு திட்ட  நிதியில்  இருந்து  ரூ. 14. 50 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதனையடுத்து புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டி  பணியை கிள்ளியூர்  சட்டமன்ற  உறுப்பினர்  ராஜேஷ்குமார் நேற்று (16-ம் தேதி)   துவங்கி  வைத்தார். இந்நிகழ்ச்சியில்  கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி