திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் ரெய்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள மொளசூரில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு, பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று(செப்.11) மதியம் 12: 45 மணிக்கு திடீர் ரெய்டு நடத்தினர். இரவு 8: 30 மணி வரை நடந்த சோதனையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் புரோக்கர்கள், டிரைவர்களிடம் இருந்து, 1.20 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். இதற்கிடையே, பறிமுதல் செய்த பணத்தை திருப்பி தரக்கோரி டிரைவர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.