திண்டிவனம் - Tindivanam

முன்விரோத தகராறில் திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்கு

முன்விரோத தகராறில் திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்கு

திண்டிவனம், முருங்கப்பாக்கம், சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவர்களது மகன்கள் கேசவன், மணிகண்டன். இவர்கள் புதியதாக வீடு கட்டி வருகின்றனர். இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3வது வார்டு திமுக கவுன்சிலர் ரேணுகா தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று(செப்.22) காலை 7: 30 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், கவுன்சிலர் ரேணுகா, அவரது மகன் ரகுபதி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து, ரகுபதி, மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా