திண்டிவனம் - Tindivanam

அனுமதியின்றி அரசியல் கட்சி பேனர்கள் கண்டு கொள்ளாத போலீசார்

அனுமதியின்றி அரசியல் கட்சி பேனர்கள் கண்டு கொள்ளாத போலீசார்

திண்டிவனத்தில் போக்குவரத்து மிகுந்த மிக்கிய சாலைகள், தாலுகா அலுவலகம், காந்தி சிலை, பழைய கோர்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நகராட்சி மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற்றபின் வைக்கப்படும் பேனர்கள், விழா நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவும், விழா நடந்து பிறகு மூன்று நாட்கள் என அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பல இடங்களில் அனுமதி பெறாமல் விழா முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும், பல பேனர்கள் அப்படியே நிலை கொண்டுள்ளது. திண்டிவனத்தில் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக அரசியல் கட்சிகளின் பேனர் சேதப்படுத்திய விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவதில் திண்டிவனம் போலீசார் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా