லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ. 1. 8 லட்சம் பறிமுதல்

77பார்த்தது
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ. 1. 8 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சந்தைமேடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்வதற்கு அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் பேரில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு தணிக்கை அலுவலர் ராணியின் மேற்பார்வையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பொறுப்பு டிஎஸ்பி. , வேல்முருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் இரண்டு வெள்ளி குங்குமசிமிழ், வெள்ளி தட்டு ஒன்றை போலீசார் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி