பைக் மீது டிப்பர் லாரி மோதி 10 மாத குழந்தை, தந்தை பலி

65பார்த்தது
பைக் மீது டிப்பர் லாரி மோதி 10 மாத குழந்தை, தந்தை பலி
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அடுத்த மேல்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், 28; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி தீவலட்சுமி, 22; இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. சென்னையில் வேலை செய்து வந்த முத்துக்குமரன், விநாயகர் சதுர்த்திக்காக சொந்த ஊரான மேல்சிவிரி வந்துள்ளார். நேற்று காலை, 10: 00 மணியளவில் வீட்டிலிருந்து, 'பஜாஜ் சிடி' பைக்கில் தணியல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி, குழந்தை தனுஸ்ரீ மற்றும் உறவினர் குழந்தை புகழேந்தி, 3, ஆகியோருடன் புறப்பட்டார். அப்போது, மேல்சிவிரி கிராமத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி, முத்துக்குமரன் பைக் மீது உரசியதில், நிலை தடுமாறி முத்துக்குமரன், தனுஸ்ரீ லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தீவலட்சுமி, புகழேந்தி மறுபக்கம் விழுந்ததால், காயங்களுடன் தப்பினர். லாரி டிரைவர் தப்பினார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி