நிலக்கோட்டை - Nilakottai

மாநிலத்தில் 3வது இடம் பிடித்த விவசாயி மகள்

மாநிலத்தில் 3வது இடம் பிடித்த விவசாயி மகள்

சின்னாளபட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஜெய்தர்சித்தா 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடமும், மாவட்டத்தில் 2வது இடமும் பெற்றுள்ளார். சின்னாளபட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டி அருகேவுள்ள அமலிநகரைச் சேர்ந்தவர்கள் கணேசன்-வாணி தம்பதி. பூர்வீக விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகள் ஜெய் தர்சித்தா அம்மையநாயக்கனூரில் உள்ள காவியன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவியை பள்ளி முதல்வர் ரவியப்துல்லா ஜெசிமா, ஆசிரியர்கள், நிர்வாகத்தினர், அலுவலர்கள், பெற்றோர் வாழ்த்தினர்.

வீடியோஸ்