தெருக்களில் வழிந்தோடும் சாக்கடை நீர்

80பார்த்தது
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை பொதுமக்கள் சார்பாக கோயம்புத்தூர் மத்திய மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரனிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அம்மனுவில் காந்திபுரம் ஒன்பதாவது வீதி தொடர்ச்சி மற்றும் ராதாகிருஷ்ணன் சாலை சந்திக்கும் நான்கு ரோடு பகுதியில் சாக்கடை நீர் சாக்கடை வடிகால் வாயிலாக செல்லாமல் தெருக்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் செல்வதாகவும் சம்பந்தப்பட்ட இந்தப் பகுதியில் இரண்டு மழலையர் பள்ளி, மருத்துவமனை மற்றும் 95 சதவீதம் குடியிருப்பு பகுதியாக இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் பெரும் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் மேலும் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகளால் நடந்து செல்பவர்கள் மீது சாக்கடை தண்ணீர் தெளிக்கப்பட்டு நடந்து செல்பவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் காந்திபுரம் ராதாகிருஷ்ணன் சாலை முழுவதும் சாக்கடை வடிகால் முழுவதும் தூர்வாரினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அந்த மனுவில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி