மேட்டுப்பாளையம் - Mettupalayam

பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது

பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முரளி (வயது 25). இவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று (செப்.12) கடை அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் மது குடிக்க பணம் கேட்டனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் கத்தி முனையில் அவரை மிரட்டினர். இதால் அதிர்ச்சியில் முரளி சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து முரளி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கேட்டு மிரட்டிய போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த தொழிலாளி நிஷாம் (வயது 33), போத்தனூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அகமத் சமீர் (வயது 32) ஆகிய இருவரை கைது செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా