கோவை: டாஸ்மாக் பணியாளர்களின் ஆர்ப்பாட்டம்!

83பார்த்தது
பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
எல். டி. யூ. சி. கோவை மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், டாஸ்மாக் கடைகள் பார்களுடன் இணைத்து செயல்படுவதை நிறுத்த வேண்டும், டாஸ்மாக் வசூல் தொகையை வங்கியில் இருந்து நேரடியாக வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியிருந்தனர். மேலும், தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி