சேலம் நகரம் - Salem City

திருப்பதி லட்டு பிரசாதம் விவகாரத்தால் லட்டின் மகிமை குறையாது- அர்ஜூன் சம்பத்

திருப்பதி லட்டு விவகாரத்தில் கலப்படம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சேலத்தில் இந்து மக்கள் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி பெருமாள் கோயிலுக்கு குடை சமர்ப்பிக்கும் விழா இந்து மக்கள் கட்சி மற்றும் செவ்வாய் பேட்டை பாண்டுரங்கநாதர் கமிட்டி சார்பில் சேலத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், திருப்பதியின் லட்டு விவகாரத்தில், கலப்படம் செய்தவர்கள் கொடிய பாதகம் அனுபவிப்பார்கள். தண்டனை நிச்சயம் கிடைக்கும். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. கோயில்களில் பெறப்படும் பிரசாதம் விஷமாக இருந்தாலும் அதனை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்வார்கள். லட்டு பிரசாதத்தில் கலப்படம் என்ற விவகாரம் மூலம் லட்டின் பெருமை மகிமை ஒருபோதும் குறையாது என்றார்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా