விருதுநகர் |

விருதுநகர்: வரலாற்றுப் பயணம் நூலை வெளியிட்ட அமைச்சர்

விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பொருநை நாகரிகத்திற்கு முன்பே வைப்பாற்று நாகரிகம் இருந்தது என்பதை வெம்பக்கோட்டை அகழாய்வு நிரூபிக்கிறது என்றார்.  விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம் எனும் நூலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம், ஒரு வரலாற்றுப் பயணம் எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நூலை வெளியிட, அதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெற்றுக் கொண்டார். இந்நூல் 25 கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் முதல் நிலைச் சான்றுகளைக் கொண்டு ஒரே ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. 540 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் 23 கட்டுரைகள் உள்ளன. இது, அரசு ஆவணக் குறிப்புகள், ஆய்வேடுகள், அரசு ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு
Top 10 viral news 🔥
Jan 29, 2025, 14:01 IST/

கல்லூரி மாணவனுடன் பேராசிரியை திருமணம்.. வீடியோ வைரல்

Jan 29, 2025, 14:01 IST
மேற்குவங்கம் மாநிலத்தில் பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர், அங்கு பயிலும் முதலாம் ஆண்டு மாணவனை திருமணம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. நாடியா மாவட்டத்தின் ஹரிங்கட்டாவில் உள்ள மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பல்கலை.யில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ உளவியல் துறையின் நாடக ஒத்திகைக்காக எடுக்கப்பட்ட வீடியோ என அந்த பேராசிரியை கூறிய நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.