வானூர் - Vanur

கொத்தனார் அடித்து கொலை: கிளியனுார் அருகே பயங்கரம்

கொத்தனார் அடித்து கொலை: கிளியனுார் அருகே பயங்கரம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சஞ்சீவி மகன் ருத்ரகுமார், 40; கொத்தனார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் (அக் 7 ) வேலைக்குச் சென்ற ருத்ரகுமார், இரவு 10: 00 மணியளவில், அவரது மொபைல் போனில் நண்பர் அழைப்பதாக மனைவியிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு முழுதும் தேடினர். நேற்று (அக் 8) அதிகாலை 4: 00 மணியளவில், புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில் கேணிப்பட்டு - கீழ்கூத்தப்பாக்கம் இடைப்பட்ட பகுதியில் சாலையோரம், சாக்கால் முகத்தை மூடி கட்டிய நிலையில் கழுத்தில் காயங்களுடன் ருத்ரகுமார் உடல் கிடந்தது. அதன் அருகே அவரது பைக் இருந்தது. தகவல் அறிந்த எஸ். பி., தீபக் சிவாச், கோட்டக்குப்பம் டி. எஸ். பி. , சுனில், கிளியனுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கொலை தொடர்பாக, 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా