வானூர் - Vanur

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

விழுப்புரம் அருகே வாலிபரைத் தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். விழுப்புரம் அடுத்த காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் பிரவின்ராஜ், 23; இவர், வீட்டருகே கடந்த 25ம் தேதி சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அவர்களை, பிரவின்ராஜ் அருகே உள்ள மைதானத்திற்கு சென்று விளையாடுங்கள் என கூறினார். அப்போது அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் அர்ஜூன், 23; என்பவர் 'ஏன் அவர்களை போகச் சொல்கிறாய்' என கேட்டு, பிரவின்ராஜை திட்டி, தாக்கினார். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அர்ஜூன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా