வானூர்: அரசு கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

55பார்த்தது
வானூர் அரசு கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியில் செயல்படும் நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். 

அவரது உரையில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்தும், தடுக்கும் வழிமுறைகளைக் குறித்தும் விளக்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. செந்தில்குமார், திரு. முத்துக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் தனது உரையில் போதைப்பொருட்களால் மாணவ மாணவிகள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை விளக்கினார். சைபர் குற்றங்களைத் தடுப்பது பற்றியும் எடுத்துரைத்தார். 

முன்னதாக போதைப்பொருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். காந்திமதி அனைவரையும் வரவேற்றார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். அருளமுதம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி