நெல்லையில் ரயில் பாதை சீரமைப்புப் பணி காரணமாக 25 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நெல்லை அருகே ரயில் பாதை சீரமைப்புப் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் - நெல்லை இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள், மார்ச் 20-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது" என தெரிவிக்கப்படுகிறது.