வளவனுார்: லாரியில் பேட்டரி திருடியவருக்கு வலை

69பார்த்தது
வளவனுார் அருகே சாலையில் நின்றிருந்த லாரியில் பேட்டரிகளை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

வளவனுார் அருகே ஏ.கே. குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், (47); இவர், தனது லாரியை கடந்த 7ம் தேதி சாலை அகரம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது லாரியில் இருந்த இரு பேட்டரிகள் திருடுபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம். புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி