
திருவெண்ணெய்நல்லூர் விபத்தில் NLC ஊழியர் மனைவி உயிரிழந்தார்
கடலுார் மாவட்டம், நெய்வேலி 26வது பிளாக் பகுதி சேர்ந்தவர் அழகானந்தம், (55); என்.எல்.சி., ஊழியர். நேற்று இரவு அழகானந்தம் குடும்பத்துடன் மகேந்திரா எக்ஸ்யூவி காரில் சென்னை நோக்கி சென்றார். இரவு 8:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் என்ற இடத்தில் சென்றபோது, கார் திடீரென நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்த அழகானந்தம் மனைவி சுந்தரி, 50; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அழகானந்தம் மற்றும் அவரது மகன் அரவிந்தன் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை, திருவெண்ணெய்நல்லூர் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.