திருவள்ளூர் நகரம் - Thiruvallur City

திருவள்ளூர்: ஆய்வு கூட்டத்தில் மயங்கி விழுந்த ஊராட்சி செயலர்

திருவள்ளூரில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வு கூட்டத்தில் ஊராட்சி செயலர்களின் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருத்தணி ஒன்றியம் மத்தூர் ஊராட்சி செயலரான வெங்கடேசன்(57) திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு சிபிஆர் அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஊராட்சி செயலர் வெங்கடேசன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊராட்சி செயலர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருவதால் மருத்துவ மனை வளாகமே சோகமாக காணப்படுகிறது ஊராட்சி செயலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி செயலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా