ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராணிப்பேட்டை மாவட்ட பிரிவு தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. கல்லூரி மாணவர்களுக்கான கபடி போட்டிகள் நாளை (16-ந் தேதி) பெல் ஆர். சி. மைதானத்தில் மற்றும் பொது பிரிவு ஆண்களுக்கான கபடி போட்டி ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 19-ந் தேதி நடைபெற இருந்தது. இப்போட்டிகள் பாணாவரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் கபடி போட்டிக்கு முன்பதிவு செய்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுப்பிரிவு ஆண்கள் பானாவரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு போட்டி நடைபெறும் தினத்தில் காலை 8.30 மணிக்கு கலந்து கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் அனைத்தும் 23-ந் தேதி அன்று நடைபெற இருந்தது. இது தேதி மாற்றப்பட்டு 21-ந் தேதி அன்று நடைபெறும். 21-ந் தேதி அன்று நடைபெறவிருந்த கல்லூரி ஆண்கள் தடகளம் 23-ந் தேதி அன்று நடைபெறும். மற்ற போட்டிகள் முன்பு உள்ள அட்டவணைபடி நடைபெறும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా