கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

வாக்கு சாவடிகள் மறு சீரமைப்பு குறித்த ஆய்வு

வாக்கு சாவடிகள் மறு சீரமைப்பு குறித்த ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16. 09. 2024) வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு 2024 முன்மொழிவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்குதல், வாக்குச்சாவடி மையங்களின் அமைவிடம் மாறுதல், பெயர் மாறுதல் போன்ற முன்மொழிவுகள் அனுப்புதல் உள்ளிட்டவை குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
Sep 16, 2024, 15:09 IST/செங்கம்
செங்கம்

உழவர் உரிமை இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Sep 16, 2024, 15:09 IST
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகாமையில் அமைந்துள்ள செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல மதகுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பனையில் மதகுகள் மூடப்பட்டு தண்ணீர் தேங்கினால் மணல் திருடுபவர்களுக்கு வழியில்லாமல் இருப்பதால் இந்த மதகுகளை திருட்டுத்தனமாக கள்ள சாவி போட்டு தண்ணீரை திறந்து வெளியேற்றிவிட்டு மணல் திருடி வருவதாக உழவர் உரிமை இயக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு அணையில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றினால் சுற்றியுள்ள விவசாய கிணறுகள் வற்றி விவசாயம் பெரிதளவு பாதிக்கப்படுவதாகவும் இதே போல் தற்பொழுது சம்பா நெல் சாகுபடி மும்முரமாக நடந்து வரும் வேலையில் இந்த தடுப்பனையிலிருந்து நீரை வெளியேற்றி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என தெரிவிக்கின்றனர். இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் உழவர் உரிமை இழக்கத்தினர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர் செயற்பொறியாளர் ஹரிஹரனிடம் பலமுறை முறையிட்டும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் நேரில் சென்று விவசாயிகள் கேட்டாள் நான் காவல்துறையிடம் கடிதம் வைத்துள்ளேன் என கூறி மெத்தனம் காட்டுவதாக கூறுகின்றனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் மற்றும் உழவர் உரிமை இயக்கத்தினர் செய்யாற்று குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மீது நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.