கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக ஆளுநர்

மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக ஆளுநர்

ஜவ்வாது மலை S. F. R. D மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த 25 ஆண்டுகளாக பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 100% தேர்ச்சி ஆளுநர் பாராட்டு. தமிழ்நாடு ஆளுநர் R. N. ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்று திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைக்கு வருகை புரிந்த ஆளுநர் ஜவ்வாது S. F. R. D மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆளுநர் அவர்களின் சொந்த நிதியில் கட்டப்பட்ட பள்ளியின் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 28 ஆண்டுகளாக 100% தேர்ச்சியும், பன்னிரண்டாம் வகுப்பில் 24 ஆண்டுகளாக 100% தேர்ச்சியும் பெற்றதைத் தொடர்ந்து பள்ளியின் நிறுவன செயலாளர் க. அருச்சுனன் , பள்ளியின் நிர்வாகி திருமதி பா. சிலம்பி மற்றும் ஆசிரியர்களை பாராட்டி ஆளுநர் பாராட்டு சான்று வழங்கி பள்ளி மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

வீடியோஸ்


திருவண்ணாமலை