திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ பூஜை

70பார்த்தது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின் நாளான திரயோதசி திதி என்று நடைபெறும் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புக்குரியது. அதன்படி, மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடந்தது. 

அதையொட்டி பிரதோஷ காலமான் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோயிலில் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரியதந்திக்கு விபூதி, மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு வாழ்த்தியளித்தார். 

மேலும் கோயில் 3-ம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல் அண்ணாமலையார் கோயிலில் அமைந்துள்ள மற்ற நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சனி மகா பிரதோஷம் என்பதால் நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி