கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

தி. மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

தி. மலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

தபால் துறை சார்பில் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் எளிமையான முறையில் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்திருப்பதாவது: தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பே மெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ஆண்டுக்கு ₹520, ₹555 மற்றும் ₹755 பிரீமியம் செலுத்தி ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை இழப்பீடு பெறும் விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில், 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடும் இல்லாமல், தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி சுமார் 5 நிமிடங்களில் இந்த பாலிசியை பெற முடியும். மேலும், இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனையும் பெறலாம். எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள் மூலம் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
பணத்தை திருடிய வாலிபர் அதிரடி கைது
Jul 21, 2024, 04:07 IST/செங்கம்
செங்கம்

பணத்தை திருடிய வாலிபர் அதிரடி கைது

Jul 21, 2024, 04:07 IST
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு கொல்லக் கொட்டா பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (56), விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சாத்தனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கிலிருந்து ₹3. 50 லட்சம் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர், ராமலிங்கத்தை திசை திருப்பி, வண்டியில் வைத்திருந்த ₹3. 50 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமலிங்கம் சாத்தனூர் அணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சாத்தனூர் அணை போலீசார் நேற்று வீராணம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹெல்மட் அணிந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்ததில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கவுதமன்(25) எனவும், கடந்த சில தினங்களுக்கு முன் விவசாயி ராமலிங்கத்திடம் ₹3. 50 லட்சம் பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரிடம் இருந்த ₹1. 90 லட்சத்தை போலீசார் மீட்டு வழக்கு பதிவு செய்து கவுதமனை கைது செய்தனர்.