அவிநாசி - Avanashi

மின்கம்பிகள் திருடிய 2 வாலிபர்கள் கைது

மின்கம்பிகள் திருடிய 2 வாலிபர்கள் கைது

மின்கம்பிகள் திருடிய 2 வாலிபர்கள் கைது குன்னத்தூர் போலீசார் ஆதியூர் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் உயர்மின் கோபுரம் அமைக்க வைத் திருந்த மின் கம்பிகளை சந்தேகப்படும் படி யாக 2 வாலிபர்கள் ஆட்டோவில் ஏற்றி வந் தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அவர் களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் மின் கம்பிகளை ஆதியூர் பகுதியில் இருந்து திருடி வந்ததும், அவர்கள் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த திருசெல்வன் (30), திரு நெல்வேலி பாப்பன்குளம் பகுதியைச்சேர்ந்த அருள்ராஜ் (26) என்பதும் அவர்கள் தற்போது குன்னத்தூர் அருகில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த குன்னத்தூர் போலீசார் அவர்களிடமிருந்து மின்கம்பிகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా