அவிநாசி - Avanashi

பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது பெருமாநல்லூர் அருகே உள்ள கணக்கம்பா ளையம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 50). இவரது மனைவி கனகமணி (43). சம்பவத்தன்று மதியம் கனக மணி வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கணக்கம்பாளை யம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த பழ னிச்சாமி என்பவரது மகன் தினேஷ் என்கிற மோகன்குமார் (21) என்பவர் தனது இருசக் கர வாகனத்தில் கனகமணியை பின்தொ டர்ந்து வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள் ளார். இது பற்றி கனகமணி சத்தம் போட்ட தால் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது பற்றி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்த போது அந்தப் பகுதியை சேர்ந்த சில பெண் களுக்கும் இதே போல் எங்களுக்கும் நடந் துள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வாலிபர் பல பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே தினேஷ் என்கிற மோகன் குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా