திருச்செந்தூர் - Thiruchendur

பிறந்த குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் போராட்டம்!

பிறந்த குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் போராட்டம்!

திருச்செந்தூர் ஆலந்தலை, ஆலமரத்துவிளையைச் சேர்ந்தவர் வினோத். சென்னை மதுரவாயலில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2-வது குழந்தையின் பிரசவத்திற்காக சசிகலா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மதியம் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை சுகப் பிரசவமாக பிறந்துள்ளது. இந்நிலையில், 7-ந் தேதி காலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 8-ந் தேதி குழந்தையின் தாயையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு திடீரென பிக்ஸ் வந்துள்ளது. இதனால் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் இரவு டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்த நர்சுகளின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி தந்தை வினோத் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, ராமேஸ்வரி, ரகுராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்‌

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా