மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

85பார்த்தது
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயாமொழி, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (42). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவருக்கு குழந்தை இல்லை. இவர் வீரபாண்டியன்பட்டணம், சண்முகபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த 14ம் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து திருச்செந்தூர், குமாரபுரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு கடந்த 15ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது மனைவி விருப்பத்தின் படி இசக்கிமுத்துவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இதையடுத்து உறுப்புகள் தானம் செய்யப்பட்ட அவரது உடல் காயாமொழிக்கு இன்று (செப்.19) காலை கொண்டு வரப்பட்டது. அரசு உத்தரவின் பேரில் இசக்கிமுத்துவின் உடலுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், தாசில்தார் பாலசுந்தரம், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பொன் ரவி, எஸ். ஐ. பாபுராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி