திருக்கோயில் பணியாளர்கள் எஸ்பி-யிடம் புகார் மனு!

54பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலருக்கு ஓட்டுனராக பணிபுரிபவர் சண்முகம் இவர் கடந்த 19ஆம் தேதி பணி முடித்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம நபர்கள் அருவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் திருநெல்வேலி தூத்துக்குடி மண்டலம் சார்பில் தலைவர் டிமிட்ரோ தலைமையில் தமிழக முழுவதும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே திருக்கோயில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருக்கோயில் பணியாளர் சண்முகம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில தலைமையின் முடிவின்படி அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி