திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; கொடியேற்றுத்துடன் தொடக்கம்

76பார்த்தது
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று இந்த ஆண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று துவங்கியது.

அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1: 30 மணிக்கி விஸ்வரூப தீபா அவர்களையும் இரண்டு மணிக்கு புதிய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது இது தொடர்ந்து காலை 5: 30 மணிக்கு திருவிழா துவங்குவதற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் தர்ப்பை புல்களாலும் , வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட செப்பு கொடி மரத்திற்கு பால் , மஞ்சள், விபூதி போன்ற 16 வகையான அபிஷேகமும் செய்யப்பட்டு, மஹா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி குமர விடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் எழுந்தருளும் நிகழ்வு கோவிலின் உட்பிராகரத்திலேயே நடைபெறும். மேலும் முக்கிய நாட்களான 5ம் நாளன்று சுவாமிக்கும் வள்ளி அம்பாளுக்கும் குடவரை தீபாராதனை நடைபெற உள்ளது. 7ஆம் நாளன்று சுவாமி சிகப்பு சாத்தி கோலத்திலும் 8ஆம் நாளன்று வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வலம் வருவார். மற்றும் முக்கிய நாளான 10ஆம் நாளான 2ஆம் தேதி திருதேரோட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி