விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரம்!

63பார்த்தது
தூத்துக்குடி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் ஐந்து ரூபாய் முதல் 5000 ரூபாய் வரையிலான மும்பை மாடல்களில் விநாயகர் சிலைகளை விற்பனைக்காக தயார் செய்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் டெண்ட் அடித்து வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் குடும்பமாக விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்படும் சிலைகளைப் போன்று பத்துக்கும் மேற்பட்ட மாடல்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு அடி முதல் 15 அடி உயர விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது இந்த சிலைகள் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது .

ராஜஸ்தான் மாநில கலைஞர்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைகள் தத்ரூபமாக இருப்பதால் இதை ஏராளமானோர் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி